Click Click

Friday, January 21, 2011

பேசிவிடு என்னோடு....



நான் கவிதை எழுதத்

துவங்கும் பொதெல்லாம்

என் நினைவு உன்னிடமே செல்கிறது

இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ

எப்படி ரசிப்பாய் என்று........

நான் எழுதிய கிறுக்கல்கள்

கவிதை என்று - உன்னைப்

பார்த்த பின்தான்

புரிந்தது எனக்கு.......

எழுத்துக்களின் அழகு - உன்

பெயரை எழுதும்போதுதான்

தெரிந்தது எனக்கு........

மொழியின் இனிமை

நீ பேசுகையில்தான்

புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்

வார்த்தைகளை விட

உன் விழிவழி கூறும்

கவிதைகள் நன்றாய்ப்

புரிகின்றன எனக்கு...........

உன்னைக் கண்ட நாள் முதலாய்

இப்படிப்

புலம்பிகொண்டுதான்

இருக்கிறேன், தினம் தினம்.........

என் புலம்பலின் விடுமுறையாய்

இன்றாவது பேசிவிடு

என்னோடு.

No comments:

Earn Money