Click Click

Thursday, December 29, 2011

Don’t want to miss u, even a while



I want to hold your hands & walk a miles
Don’t want to miss u, even a while

My life is so beautiful b'coz
Dear, its you. My LIFE

Hug me for my worries to die
My tears to dry and
My lonliness to fly

It hurts me to know
How it sometimes can be little selfish
When it comes to you.

I am getting sentimental over you!
For god sake explain me why all these.

I miss you every moment of the day,
I keep me awake just to listen you,
I keep me empty just for you to fill,
I keep me alive just to see you.

My mornings miss you,
My evenings seeks you
Where were you all these years,
You weren’t here to wipe my tears.

Fear of future is worse than pain of the past
Still I bother the least coz u are there

Even seconds are too long to miss you
I want to hold your hands & walk a mile
Don’t want to miss u, even a while

Thursday, May 19, 2011

சமன்பாடு...




எப்பொழுதும் நானே
வெற்றிப் பெற வேண்டுமென்று
விடுகதையை எளிதாக சொல்வாய்.

உன்னை விடுவிக்க
மனமில்லாமல் இன்னும்
எளிதாக எளிதாக என்று
உன்னிடம் தோற்றுக் கொண்டே
இருப்பேன் நான்!!!

பேய் அழகு...



கோபம் வரும் பொழுது
என்னை பேய் பிடித்து
விடுகிறதுதாம் ...

அடியே...
நீ அருகில் இருக்கும்
பொழுது யாரேனும்
பக்கத்தில் இருக்கிற
என்னைத்தான் பிடிக்கிறது
என்பார்களா?!!!
எவ்வளவு அழகு நீ ...




பெறுநர்,

தேவதைகளின் அரசி,
தேவதை குடியிருப்பு,
தேவதைகளின் நகரம்,
தேவதைகளின் நாடு.

என் தேவதையே...,

உனக்கு ஒரு அழகான காதல் கடிதம் எழுதலாம் என்று அமர்ந்த பொழுது உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அழகானது என்றதும் உன் முகத்தைத் தவிர எதுவும் எனக்கு நினைவிற்கு வரவில்லை. இரண்டு உருண்டோடும் இரு கறுப்புப் புள்ளிகளுக்குள்ளே சின்னதாய் வெள்ளையாய் இருப் புள்ளிகளில் ஆரம்பித்து அதைச் சுற்றி முட்டை வடிவில் அங்குமிங்குமாய் கோடுகள் கிளித்து கடவுள் ஆரம்பித்த அந்த கோலம் முடியும் பொழுது முகமாய் மலர்ந்த உன்னை அந்த பிறை நிலாவும் வேடிக்கைப் பார்த்திருக்கும் எனபதில் யாருக்கேனும் சந்தேகம் வந்திருக்குமோ...! இவ்வளவு அழகான உன்னை விடவா பிரம்மனால் இன்னொரு அழகைப் படைக்க முடியும்??! இல்லை... கண்டிப்பாக இல்லை...

பசி போன்றது காதல் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். காதல் வந்தால் பத்தும் என்ன மொத்தமும் பறந்து போகுமாம்...பசிக்கும் என்பார்...உறங்க துடிக்கும் என்பார்...ஆனால் எதுவுமே நடக்காமல் அவள் பின்னாலேயே பொய் நிற்குமாம் இந்த இதயம்...இதெல்லாம் நம்ப முடிகிறதா??? இல்லை என்றாலும் எனக்கு மட்டும் தூக்கம் கூடத் துரோகம் செய்வதைப் பார்... நான் தூங்கும் முன்னரே தினமும் என் கண் முன்னாலேயே வந்து நின்று விடுகிறாய்...தூங்கலாம் என்று முகத்தை மூடுகையில் என் இமைகளை தட்டுகிறாய்...யோசித்துப்பார்! அதன் பிறகு என் கனவைக் கலைத்து எழுந்து விட முடியுமா என்ன...

தினமும் சூரியன் தலைக்கு வரும் வரை தூங்கி விடுகிறேன். பாவம் இந்த மனசு மட்டும் கனவே கலைந்து விடாதே என்று கண்களை திறக்க விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது...இது ஒரு புறமிருக்க எனக்குள் இருக்கும் உன் பசியை மட்டும் என்னால் தீர்க்க முடியாமல் தினம் தினம் திண்டாடிப் போகிறேன்...அளவிற்கதிகமாக உண்ணும் என்னைப் பார்த்து என் தாய் கேட்கிறாள் " நீ சாப்பிடுவதெல்லாம் எங்கே போகிறது..உன் உடம்பில் எதோ பிரச்சினை இருக்கிறது, மருத்துவரைப் பார்க்க வேண்டும்" என்று. நான் என் பசிக்கு சாப்பிட்டால் என் உடல் தேறும் நான் சாப்பிடுவது உன் பசிக்கு அல்லவா ... இருந்தும் தினம் ஆறு முறை பெரும்பாடு படுகிறேன்...இதில் என் பசிக்கு எப்படி சோறு போடுவது ...இப்படி இருக்க மருத்துவர் மட்டும் என்ன செய்து விட முடியும்...

எல்லாவற்றிற்கும் காரணம் காதல்...

சிலருக்கு இந்த காதல் பாழாய் போனது...ஆனால் எனக்கோ பாழையும் சீராய் போக்கியது இந்த காதல் ...

உனக்கு நினைவிருகிறதா? முதல் முதலாய் நான் உன்னை சந்தித்த அந்த நொடி... வண்ண நிற பலூன்களை பார்த்ததும் "எனக்கு அது வேணும்..வேணும்..." என்று அழுது குதிக்கும் குழந்தை போல என் மனம் அடம்பிடித்து நின்றது. அப்பொழுதுதான் இந்த மானம் கேட்ட என் மனம், உன் அழகிற்கு என்ன தரலாம் என்று கணக்கு போட ஆரம்பித்தது...ஆனால் பாவம் மனது...அதனால் கணக்கிடும் அளவிற்கு அது இல்லை...மில்லியன், பில்லியன் என்று கணக்கு நீண்டு கொண்டே போனது ... உன் அழகை அளவிட எந்த கணிணியும் கண்டுபிடிக்கவில்லை என்று உன்னை பார்த்த உடனேயே கண்டு கொண்டேன்..

பிறகு என் மனம் எனக்கு தட்டிக் கொடுத்தது "நீ புண்ணியம் செய்தவன் டா" என்று. உண்மைதானே எத்தனை பேர் தவம் கிடந்தாலும் கிடைக்காத தரிசனம், எவ்வளவு எளிதாக கிடைத்தது எனக்கு...உண்மையில் நான் புண்ணியம் வாங்கிக் கொண்டவன்தான்!. அதன் பிறகு என் மனம் என்னை புண்ணியவான் என்று அழைக்க ஆரம்பித்தது!!!

முக்தி பெற்ற முனிவன் போல் நான் மாற ஆரம்பித்தேன். தவம்... தவம்... கடும் தவம்... உனக்காக நீ வரும் பாதை எல்லாம் கூடுகள் கட்டி இருக்க ஆரம்பித்தேன். அப்பொழுதெல்லாம் என் மனம் சொல்லும் "போ...போய் உன் காதலைச் சொல்லு..." என்று. நான் கேட்க மாட்டேன்..."சீ..சும்மா இரு ... என் தவம் கலைந்து விடும்..." என்று. என் மனம் எத்தனை முறை சொல்லியும் நான் கேட்கவில்லை. தவத்தினால் என்னை கட்டிப் போட்டேன்.

ஒரு நாள் என்னை நீ குறுக்கிடும் பொழுது தலையை திருப்பிப் பார்த்து சிரித்தாய். அப்பொழுது எப்படி இருந்தது தெரியுமா?! யோசித்தாலே என் மயிர் கால்கள் திளிர்த்து நிற்பதைப் பார்...நீ இதழை விரிக்காமல் முகத்தை விரித்து சிரித்ததைப் பார்த்து என் இதயம் கூட்டை விட்டு வெளியே வந்து குதித்தது, என் கண் முன்னே குதித்து உன் நிழல் பார்த்து துடித்தது...அதன் பிறகு என் இதயம் நான் சொல்வதை கேட்க தயாராக இல்லை...கையில் பேனாவுடன் அமர்ந்துவிட்டது.

எனக்கு கவிதை எழுத தெரியும் என்று புரிந்து கொண்ட நாள் அது. ஒரு வரியிலிருந்து பத்தி பதியாய் எழுதி தள்ளியது என் பேனா...அன்று மட்டும் என் பேனா மையும் வெள்ளைத் தாளும் தீர்ந்து விடவில்லை என்றால் நம் தமிழின் அடுத்த காதல் விகட கவி ஆகியிருப்பேன் என்று எண்ணத் தோன்றியது...ஆனால் பாவம் இந்த பேனா என்னை ஏமாற்றிவிட்டது.

காலையில், எழுதியதை பார்த்து...பார்த்து...படித்து...படித்து...மகிழ்ந்து கொண்டேன்.

இன்று என் காதலைச் சொல்லி அவளை என் கூடாரத்திற்கு அழைத்து வரப் போகிறேன்...

என் காதல் தெய்வங்களே என்னை ஆசிர்வதியுங்கள், இன்று நான் தேர்வு எழுதப் போகிறேன்...என்று விண்ணைப் பார்த்து வேண்டினேன். அதற்கு ஒரு எதிரொலிக் கூட கேட்கவில்லை...அப்பொழுதே புரிந்து கொண்டிருக்க வேண்டும் நான்...ஆனால்....

என் பகல் அன்று உன் பாதையில் விடியற்காலையிலேயே வந்து விடிந்தது. புது உடை,கையில் கடிகாரம், கவிதை தொகுப்பு, ஒரு அழகான ஒரு சிவப்பு ரோஜா என்று என் இரண்டு வருடத் தவம் கலைத்து அந்த சாலையில் வந்து நின்றேன்...

காலை ஆறு மணியிலிருந்து 7.00, 8.00, 9.௦௦... 12.௦௦. என்று நீண்டது நேரம். அவள் வரவில்லை...யாரெல்லாமோ என்னை குறுக்கிட்டுச் சென்றனர்...என் தேவதை மறைந்திருந்தாள்...அப்படி என்றால் மறையும் பொழுது எதற்காக சிரித்தாள்??? என்று கேட்ட பொழுது என் மனம் சொல்லியது,

"ஹ ஹ ஹா ...முட்டாள்...ஒரு பக்தனுக்கு எத்தனை முறை ஒரு சாமி தரிசனம் தரும்...முதல் நாளே சாமியை அழைத்து உன் பூஜை அறையில் அமர வைக்க முடியவில்லை...தூ...நீ எல்லாம் காதலிக்கிறாய்?!!!" என் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது.

"அப்படி என்றால் இனி அவள் வர மாட்டாளா...ஐயோ..." என்று தலையில் அடித்து அடித்து அழ வேண்டும் போலிருந்தது எனக்கு. ஆயிரம் கவிதை வைத்திருக்கிறேன், எண்ண முடியாத அளவிற்கு கடிதங்கள் வைத்திருக்கிறேன்...அதில் எப்படி அவள் முகவரியை எழுதுவேன்...தேவதை நகரம்..சொர்க்க பூமி என்றும் தேவதைகளின் அரசி என்றும் எழுதினால் அவளுக்கு சென்று அடையுமா? சொல்லுங்கள் நண்பர்களே...

ஒருவேளை இந்த கடிதம் உங்கள் கைகளை அடைந்தால், அதன் மூலம் என் தேவதையை அடையாளம் கண்டால் உடனே எனக்கு தெரியப் படுத்துங்கள் நண்பர்களே...பாற்பதற்கு தேவதை போல் இருப்பாள்...அவள் கண்களில் ஒரு ஒளி இருக்கும்...சரித்திரக் கதைகளில் வரும் நாயகி போல் இருப்பாள்...ஆயிரம் பெண்கள் என்ன, உலக அழகிகள் ஒன்றாக வந்தாலும் அதில் முதலாவது வருவாள் அவள்...பார்த்தால் எந்த மனிதனும் மயக்கம் கொள்வான்...தயவு செய்து அவளிடம் மயங்காமல் எனக்கு தெரிவியுங்கள்...இன்னும் என் இதயம் அவள் போன சாலையிலேயே கிடக்கிறது அழுது கொண்டு....

LINES OF JEYAN!!!!

LINES OF JEYAN!!

Friday, January 21, 2011

காதல் கடிதம்



வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதமிது. உன்னை நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது.

சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்று தந்தவள் நீ. விழுந்திட போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.

மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டபட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.

சந்திர சூரியனகளை வெறும் இரவு பகலை அடையாளம் காண மட்டுமே பார்த்தவன் நான். நீயோ சூரியனையே தொட நினைத்த‌ ஃபீனிக்ஸ் பறவை.

கணிதம் மட்டுமே அறிந்தவன் நான். கவிதையாகவே வாழ்ந்தவள் நீ. கணிதம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நீ அறிவாய். கவிதையும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நீ வரும்வரை நான் அறியவில்லை.

பாறையாய் நான்.பசுமரமாய் நீ.வெடிகுன்டுக்கு பிளக்காத பாறை வேருக்கு பிளந்த அதிசயம் என்ன? வைரமுத்து கேட்டது போல் இதில் யாருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க? பாறைக்குள் புகுந்த வேருக்கா? இல்லை, வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?

உன்னை பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல்.

உன்னை பார்க்க ஏதாவது ஒரு பொய் சொல்லி எத்துனை முறை வந்திருப்பேன்? கல்யானத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். அதுவும் உன்னை காதலிக்க கோடி பொய்கள் சொல்லலாம்.

ஆரம்ப காலங்களில் உன்னைக் கானும் பொதெல்லாம் என் காதல், புற்றுக்குள்ளே தன் தலையை இழுத்துக் கொள்ளும் பாம்பை போல மறைத்துக் கொள்ளும். ஆனால், நீ பேசத் தொடங்கிய ஒரிரு நிமிடங்களிலே கங்காருவின் குட்டிப் போல் மெல்ல எட்டி பார்க்கும்.

உன்னோடு நான் பழக ஆரம்பித்த பின் வந்த ஒரு மழையில் நனைந்தபடி உலா வந்தபோது "பாவம், மூளையை தொலைத்தவன்" என்றவர்களை பார்த்து "பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.

என் ஜீவன் உன்னோடு இருக்க என் தேகம் மட்டும் எப்படி இத்தனை ஆண்டு காலம் காற்று குடித்தது என்ற நான் கேட்ட ஒரு நன்னாளில் தான் என் காதல் உனக்கு புரிந்தது என்பதை நான் நம்பவில்லை என்றாலும் நம்பினேன்.

அந்த நேரத்தில் நான் எழுத முற்பட்ட கவிதைகள்(எனவும் சொல்லலாம்) ஒன்றை சொல்வதை விட, இதை படித்து பார். நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன். அய்யனாருக்கு நன்றி

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.

ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கி பிடித்து நடுவில் ஓட்டை பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

இதற்கு முன்னமும் சில பெண்களோடு பழகி இருக்கிறேன்.அப்போதெல்லம் பரிமாறும் முன்னமே வெறும் இலையை தின்றுவிட்டு ருசியில்லை என்றேன். இன்று உன்னால் வயிறு நிரம்பி மனசும் நிறைந்துவிட்டது

நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்து போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல் சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.

இறுதியாய் நீயும் ஒரு நாள் உன் காதலை சொல்லிவிட்டாய். நீ சென்ற பிறகும் என் நடுக்கம் குறையவில்லை. மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?

அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோண்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்தத்வள் நீ.பாரமல்ல.

இரவுகள் முழுவதும் உன் ஞாபக கொசுக்கள். புரண்டு புரண்டு படுப்பேன். தூக்கமும் புரண்டு புரண்டு படுக்கும்.உன்னைக் காண வேண்டும் என மனசு அரிக்கும்.ஆனால் எந்த விரல் கொண்டு சொரிந்து கொள்வது? இப்படியாக எத்தனை இரவுகள்?

சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன்.

அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம். பூமியை தொடாத குழந்தையின் பாதங்களைப் போல் அத்தனை மிருதுவாய் உன் உதடுகள். இதுதான் முத்தமா? இத்தனை நாள் இது வேறு மாதிரி அல்லவா நினைத்திருந்தேன். ஆனால்,அதை விட நன்றாய் இருந்தது.

Yeh!! Penne!!!



உன்னால் தான்
உன்னால் தான்
கவிதை வடித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
இவ்வுலகம் அறிந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
என்னை மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கையெழுத்து அழகானது
உன்னால் தான்
உன்னால் தான்
இதயம் இடமாறிதுடித்தது
உன்னால் தான்
உன்னால் தான்
இயற்கையை ரசித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கண்விழித்து கனவுகன்டேன்
உன்னால் தான்
உன்னால் தான்
பசி; தூக்கம் மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
தனிமையில் சிரித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கைவிடாதே காதலியே
உனக்காக தான்
உனக்காக தான்
என் உயிறும் உடலும்
உனக்காக தான்...

பேசிவிடு என்னோடு....



நான் கவிதை எழுதத்

துவங்கும் பொதெல்லாம்

என் நினைவு உன்னிடமே செல்கிறது

இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ

எப்படி ரசிப்பாய் என்று........

நான் எழுதிய கிறுக்கல்கள்

கவிதை என்று - உன்னைப்

பார்த்த பின்தான்

புரிந்தது எனக்கு.......

எழுத்துக்களின் அழகு - உன்

பெயரை எழுதும்போதுதான்

தெரிந்தது எனக்கு........

மொழியின் இனிமை

நீ பேசுகையில்தான்

புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்

வார்த்தைகளை விட

உன் விழிவழி கூறும்

கவிதைகள் நன்றாய்ப்

புரிகின்றன எனக்கு...........

உன்னைக் கண்ட நாள் முதலாய்

இப்படிப்

புலம்பிகொண்டுதான்

இருக்கிறேன், தினம் தினம்.........

என் புலம்பலின் விடுமுறையாய்

இன்றாவது பேசிவிடு

என்னோடு.

Earn Money